Skip to main content

தமிழில் எப்படிப் பேச: நேர்பட x நேர்ப்பட ?

தமிழில் ஏதோவொரு பண்பை , தன்மையை உரைக்கும் (பெயர்ச்)சொல்லை "வினைச்சொல்லாக" மற்ற முடியும்.

தமிழில் ' மெய் ' என்ற சொல் உடல் , உண்மை  என்ற குறிப்பை உணர்த்துகின்றது.

மெய் -  something that is present ( ubiquitous / universal).

மெய் என்பது ஒரு 'குறிப்பு'. வினைச்சொல் அல்ல.ஆனால் இதை வினைச்சொல்லாக மாற்றமுடியும். எப்படி ?

 மெய்
 -     மெய்ப்பட்ட       :  மெய்ப்பட்ட கனவு
 -     மெய்ப்படுகின்ற :   மெய்ப்படுகின்ற கனவு
 -     மெய்ப்படும்      :   மெய்ப்படும் கனவு
 -    மெய்ப்பட்டது     :   கனவு மெய்ப்பட்டது
 -    மெய்ப்படுகின்றது  : கனவு மெய்ப்படுகின்றது
 -    மெய்ப்படும்.       :   கனவு மெய்ப்படும்
 -     மெய்ப்பட          :   கனவு மெய்ப்பட வேண்டும்
 -     மெய்ப்பட்டு       :   கனவு மெய்ப்பட்டு விட்டது  

ஆகவே குறிப்பை உணர்த்தும் ஒரு (பெயர்ச்)சொல்லை 'வினைச்சொல்லாக / எச்சமாக ' மற்ற உதவுவது ' பட்ட,படுகின்ற,படு,பட,பட்டு' என்னும் துகள்கள்.

- இதற்குப் பெயர் 'வினைப்படுதுதல்'
- அதாவது வினையாக்குதல்.
-  அதாவது குறிப்புச் (பெயர்ச்) சொல்லை வினைச்சொல்லாக மாற்றுவது

எ.க.
பெருமை  -  பெருமைப்பட்டான் ,  பெருமைப்பட்டு            

- பெருமை என்பது ஒரு 'குறிப்பு'. ஒரு பொருளோ , வினையோ அல்ல

* சொல்லுக்கும் பட்ட,பட,பட்டுக்கு இடையே 'ப்' என்ற ஒற்று வரும்

* எந்த எழுத்துகளுக்கு 'ஒற்று' வருமென்று விதிகள் உண்டு. அதற்கான பயிற்சி / காணொளி lessons.

* "ய்,ர்,ழ்" என்ற மூன்று மெய்யெழுத்துகள் அடுத்தும் ஒற்று வரும். இப்பொழுது ,

தமிழில் நேர்பட பேசுவதா  அல்லது  நேர்ப்படப் பேசுவதா  ?

தமிழைச் சீர்படுத்தலாமா  அல்லது சீர்ப்படுத்தலாமா ?

கனவு  மெய்படுமா   அல்லது  மெய்ப்படுமா ?