'கள்' என்ற விகுதி (Suffix) பன்மை (plural) உரைக்கும் என்று நாமறிவோம்.
எழுத்து - letter - (ஒருமை) singular
எழுத்துகள் - letters - (பன்மை) plural
எ.க. தமிழின் சிறப்பு எழுத்து 'ழ'
தமிழ் எழுத்துகள் அழகானவை.
ஒரு பெயர்ச்சொல்லுடன் 'கள்' சேர்ந்தால் பன்மை வருகின்றது.
1) வருமொழியில் 'க,ச,த,ப' வந்தால் ஒற்று வருமென்று படித்துள்ளோம்.
2) வன்தொடர்க் குற்றியலுகரம் அடுத்துக் க,ச,த,ப வரின் ஒற்று வருமென்றும் படித்துள்ளோம்.
ஆனால் , எழுத்து + கள் = எழுத்துகள் [ ஒற்று வரவில்லை ]
ஏன் ?
'வாழ்த்துகள்' என்பதே சரி. இருப்பினும் குற்றியலுகர விதிகளைக் கொண்டு 'வாழ்த்துக்கள்' என்று எழுதுவர். மரபு/வழக்கு என்ற அடிப்படையில் இதுவும் சரியே. ஆனாலும்
'கொக்கு' -> கொக்குகள் என்றுதான் எழுதமுடியும்.
'விளக்கு' -> விளக்குகள் என்றுதான் எழுதமுடியும்.
'வாத்து' -> வாத்துகள் என்றுதான் எழுதமுடியும்.
'பாட்டு' -> பாட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.
'தட்டு' -> தட்டுகள் என்றுதான் எழுதமுடியும். என்றே எழுதுகின்றோம்.
- குற்றியலுகர நிலைமொழிச் சொல்லின் அடுத்துக் 'கள்' விகுதி வந்தால், இடையில் 'ஒற்று' வராது. ( பன்மை விகுதியாக 😊 )
ஆடுகள் , படகுகள் , சிறகுகள் , வாழ்த்துகள் , மருந்துகள் , இயல்புகள் , இரவுகள்* , ஆண்டுகள்*
- மெய்யெழுத்து அடுத்து ஒற்று வராது
கண்கள் , கால்கள்
- குறில் அடுத்து ஒற்று வராது
விழிகள் , வழிகள் , எலிகள் ,
- நெடில் ஓசை அடுத்து ஒற்று வரும் . ஒரே அலங்கடை ' ஐ '
விழாக்கள், ஈக்கள் , பூக்கள் , கைகள்* , யானைகள்*
- முற்றியலுகரம் அடுத்து ஒற்று வரும்
குழுக்கள் , கொசுக்கள் ,
- சில இயற்கைப் பொருட்களுக்கு மரபாகவே பன்மை இல்லை.
நீர்கள், காற்றுகள், வான்கள், திக்குகள் (திசை) என்று பன்மையில் எழுதுவது இல்லை. இவை ஒருமையில் தான் வரும்.
- சில வடமொழிச் சொற்கள் - பந்துக்கள் vs பந்துகள்
'பந்தம் bandham / bandhu'என்ற வடமொழிச் சொல்லை 'பந்துக்கள்' என்று பன்மையில் எழுதுவர். பந்துகள் என்று குற்றியலுகர வகைமையில் தான் எழுத வேண்டும், இருப்பினும் ஏற்கனவே 'பந்து' ball என்ற சொல் வழக்கில் இருப்பதால் இவ்வாறு சிலவிடங்களில் அலங்கடையுடன் வரும்.
* 'வு' என்ற எழுத்தைக் குற்றியலுகரமாக உச்சரிப்பதில்/எழுதுவதில் உள்ள பயன் , 'இரவுகள் , நிலவுகள்' என்று எழுதுவதைப் பொதுமைப்படுத்த எளிமையாக இருப்பது தான்.
* 'ஆண்டுத்திட்டம்' 'ஆண்டுக் கொண்டிருந்தான்' என்று எழுதும் வழக்கு இருந்தது. ஆனால் 'குற்றியலுகர' விதியின்படி 'ஆண்டு திட்டம்' 'ஆண்டுகொண்டிருந்தான்' என்று எழுதினால் 'ஆண்டுகள்' என்று எழுதும் பொழுது நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.
* நாட்கள் Vs நாள்கள் ?
புணர்ச்சி விதிகள் 'பன்மை' விகுதிக்குப் பொருந்துமா ?
நாட்கள் என்று எழுதுவது தவறு, 'நாள்கள்' என்று எழுதுவதே சரி என்பர் சிலர் .
அப்போது 'சொற்கள்,கற்கள்,பற்கள்,ஆட்கள்' - எது சரி View Video-lessons
எழுத்து - letter - (ஒருமை) singular
எழுத்துகள் - letters - (பன்மை) plural
எ.க. தமிழின் சிறப்பு எழுத்து 'ழ'
தமிழ் எழுத்துகள் அழகானவை.
ஒரு பெயர்ச்சொல்லுடன் 'கள்' சேர்ந்தால் பன்மை வருகின்றது.
1) வருமொழியில் 'க,ச,த,ப' வந்தால் ஒற்று வருமென்று படித்துள்ளோம்.
2) வன்தொடர்க் குற்றியலுகரம் அடுத்துக் க,ச,த,ப வரின் ஒற்று வருமென்றும் படித்துள்ளோம்.
ஆனால் , எழுத்து + கள் = எழுத்துகள் [ ஒற்று வரவில்லை ]
ஏன் ?
'வாழ்த்துகள்' என்பதே சரி. இருப்பினும் குற்றியலுகர விதிகளைக் கொண்டு 'வாழ்த்துக்கள்' என்று எழுதுவர். மரபு/வழக்கு என்ற அடிப்படையில் இதுவும் சரியே. ஆனாலும்
'கொக்கு' -> கொக்குகள் என்றுதான் எழுதமுடியும்.
'விளக்கு' -> விளக்குகள் என்றுதான் எழுதமுடியும்.
'வாத்து' -> வாத்துகள் என்றுதான் எழுதமுடியும்.
'பாட்டு' -> பாட்டுகள் என்றுதான் எழுதமுடியும்.
'தட்டு' -> தட்டுகள் என்றுதான் எழுதமுடியும். என்றே எழுதுகின்றோம்.
- குற்றியலுகர நிலைமொழிச் சொல்லின் அடுத்துக் 'கள்' விகுதி வந்தால், இடையில் 'ஒற்று' வராது. ( பன்மை விகுதியாக 😊 )
ஆடுகள் , படகுகள் , சிறகுகள் , வாழ்த்துகள் , மருந்துகள் , இயல்புகள் , இரவுகள்* , ஆண்டுகள்*
- மெய்யெழுத்து அடுத்து ஒற்று வராது
கண்கள் , கால்கள்
- குறில் அடுத்து ஒற்று வராது
விழிகள் , வழிகள் , எலிகள் ,
- நெடில் ஓசை அடுத்து ஒற்று வரும் . ஒரே அலங்கடை ' ஐ '
விழாக்கள், ஈக்கள் , பூக்கள் , கைகள்* , யானைகள்*
- முற்றியலுகரம் அடுத்து ஒற்று வரும்
குழுக்கள் , கொசுக்கள் ,
- சில இயற்கைப் பொருட்களுக்கு மரபாகவே பன்மை இல்லை.
நீர்கள், காற்றுகள், வான்கள், திக்குகள் (திசை) என்று பன்மையில் எழுதுவது இல்லை. இவை ஒருமையில் தான் வரும்.
- சில வடமொழிச் சொற்கள் - பந்துக்கள் vs பந்துகள்
'பந்தம் bandham / bandhu'என்ற வடமொழிச் சொல்லை 'பந்துக்கள்' என்று பன்மையில் எழுதுவர். பந்துகள் என்று குற்றியலுகர வகைமையில் தான் எழுத வேண்டும், இருப்பினும் ஏற்கனவே 'பந்து' ball என்ற சொல் வழக்கில் இருப்பதால் இவ்வாறு சிலவிடங்களில் அலங்கடையுடன் வரும்.
* 'வு' என்ற எழுத்தைக் குற்றியலுகரமாக உச்சரிப்பதில்/எழுதுவதில் உள்ள பயன் , 'இரவுகள் , நிலவுகள்' என்று எழுதுவதைப் பொதுமைப்படுத்த எளிமையாக இருப்பது தான்.
* 'ஆண்டுத்திட்டம்' 'ஆண்டுக் கொண்டிருந்தான்' என்று எழுதும் வழக்கு இருந்தது. ஆனால் 'குற்றியலுகர' விதியின்படி 'ஆண்டு திட்டம்' 'ஆண்டுகொண்டிருந்தான்' என்று எழுதினால் 'ஆண்டுகள்' என்று எழுதும் பொழுது நினைவில் வைத்துக்கொள்ள உதவும்.
* நாட்கள் Vs நாள்கள் ?
புணர்ச்சி விதிகள் 'பன்மை' விகுதிக்குப் பொருந்துமா ?
நாட்கள் என்று எழுதுவது தவறு, 'நாள்கள்' என்று எழுதுவதே சரி என்பர் சிலர் .
அப்போது 'சொற்கள்,கற்கள்,பற்கள்,ஆட்கள்' - எது சரி View Video-lessons