Skip to main content

Posts

Showing posts from March, 2020

திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம்.

இலக்கண இலக்கிய சமய நூல்களில் புலமை மிக்கவராகவும் திருவாடுதுறை ஆதினத்தில் மாபெரும் தமிழ் கவிஞராகவும்  தமிழ்ப்பற்று மிக்க மாணவர்களுக்குச் சிறந்த ஆசிரியராகவும் விளங்கியவர் ' திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சுந்தரம் ' அவர்கள். இறையையும் தமிழையும் ஒன்றாகக் கருதி வாழ்ந்த தமிழறிஞர். சாதிமத வேறுபாடின்றித் தமிழ்க்கல்வி அளித்ததோடு மட்டும் அல்லாமல் மாணாக்கருக்கு உணவும் இடவசதியும் அளித்தார் . இவரது மாணாக்கரில் ஒருவர்தாம் ' உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சுவாமிநாதர் ' என்கின்ற ' உ.வே.சா '. பின்னாட்களில்  ' தமிழ்த்தாத்தா ' என்றழைக்கப்பட்ட   மகாமகோபத்தியாய டாக்டர். உ.வே.சா  .     ஆசிரியருக்கும் மாணாக்கருக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவாக இருந்தது. தமிழ்த்தாத்தா உ.வே.சா தமிழுக்கு ஆற்றிய அரும் பணியும் அவர்தம் வாழ்நாள் முழுவதும் தேடியலைந்து உரையெழுதிப் பதிப்பித்த சங்கத் தமிழிலக்கிய நூல்கள் இல்லையேல் இன்று  நாம் இலக்கியங்களையே இழந்திருப்போம். அத்தகைய பெருமகனாரின் ஆசிரியரான ' திரிசிரபுரம் மகாவித்வான் தமிழ்க்கடல் திரு. மீனாட்சி சு

கல்வி

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.